சர்வதேச கராத்தே போட்டியில் இந்தியா 20பதக்கங்கள் வென்று சாதனை..

இலங்கையில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் இந்தியா 20பதக்கங்கள் வென்று சாதனை!
இலங்கையில் உள்ள கண்டி மகாணத்தில் டென்சின் கோப்பைக் கான ஐந்து நாடுகள் கலந்து கொண்ட
22 வது சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது.
இந்தியா, மலேசியா_ தாய்லாந்து, இந்தோனேஷியா, பங்களாதேஷ் ஆகிய நாட்டினை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர்.இந்தியா சார்பில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் செயல்பட்டு வரும் சேப்பா அகடமி வீரர், வீராங்கனைகள் மாஸ்டர்கள். ராஜா, சங்கீதா தலைமையில் கலந்து கொண்டுமொத்தம் 20 பதக்கங்கள் வென்றனர்.சங்கீதா தங்கம் 1, பிரியங்கா தங்கம் 1 வெள்ளி 1, ஹரிகிருஷ்ணன் தங்கம்1,வெள்ளி1,ராகேஷ்ரோஷன் தங்கம் 1, வெள்ளி 1, பாரதி 2 தங்கம் , ஜெயமித்ராதங்கம் 1 , வெள்ளி 1, காவ்யா தங்கம் 2, யாஸ்ஐயப்பன் வெள்ளி 2, மோனிஷ் தங்கம்1,வெள்ளி 2, இனியன் தங்கம்1, வெங்கலம் 1, ரியா வெள்ளி 2, சசிகா தங்கம் 2, மொத்தம் 20பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சேப்பா அகடமி நிர்வாகிகள். மாஸ்டர். ராஜா, மாஸ்டர். சங்கீதா இருவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.