fbpx
Others

கோவில் நிலங்களை மீட்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கோயில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு
தமிழகத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இதில் மண்டல வாரியாக நெல்லை மாவட்டத்தில் 2705.79 ஏக்கர், சிவகங்கை மாவட்டத்தில் 1897.51 ஏக்கர், திருச்சி மாவட்டத்தில் 3151.14 ஏக்கர், திருப்பூர் மாவட்டத்தில் 3043.77 ஏக்கர் என பல்வேறு மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 31,670.64 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் HRCE என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் நடப்பட்டு கம்பிவேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் நிலம் அளவீடு பணிகளை விரைந்து முடிக்குமாறு வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close