fbpx
Others

ஈரோடு–தாளவாடி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, வனச்சரகத்துக்குட்பட்ட ஒசூர் “கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 38). இவர் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தோட்டத்தில் புகுந்த 2-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மக்காச்சோளம் பயிரை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்ற விவசாயி அப்துல்லா இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையால் 1 ஏக்கர் மக்காச் சோளம் பயிர் சேதம் அடைந்துள்ளது. இதற்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் தோட்டத்தில் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close