fbpx
Others

இந்திய இரண்டுகப்பல்களும் பதற்றம்நிலவும் ஜலசந்தியைவழியாக செல்ல ஈரான்அனுமதி…

Hormuz: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல்கள்: மோடியின் ராஜதந்திரத்தால்  திறக்கப்பட்ட கடல் வழி? | Indian Lpg Tankers Shivalik And Nanda Devi Safely  Cross Strait Of Hormuz ...எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும்சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.முன்னதாக இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் இந்த வழியாக செல்ல அனுமதி அளித்ததாக கூறப்பட்டது. பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உடன் அண்மையில்
தொலைபேசியில் பேசினார். மேலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளன.40,000 மெட்ரிக் டன் எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்த ஷிவாலிக் கப்பல் தற்போது இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. இது இன்னும் இரண்டு நாட்களில்மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல அதிகளவில் எல்பிஜி ஏற்றி நந்தா தேவிகப்பலும் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டது. முன்னதாக கேப்டன் மற்றும் மாலுமிகள் உயிரை பணயம் வைத்து மற்றொரு இந்திய எண்ணெய்கப்பல் ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close