Others
ஆற்காடு–பஸ் படிகட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில் இருந்தும், அதிகளவு மாணவ, மாணவியர் நாள்தோறும் ராணிப்பேட்டை வாலாஜா உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி பயில சென்று வருகின்றனர்
இந்நிலையில் போதிய பேருந்து இல்லாததால் 5 – 6 -2025 அன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்தது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காககூடுதல் பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்