Others
அமைச்சர் சாமிநாதன் பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் தகவல்…!

பருவ இதழ்கள் அல்லது கால முறை இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது தொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் நிறைந்த மனம் எனப்படும் பொதுமக்களை சந்திக்கும் புதிய நிகழ்ச்சி குறித்து எடுத்துரைத்தார்.தமிழகத்தில் செய்தித்துறை அமைச்சராக இருக்கும் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர்கள் நலனிற்கு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்திருக்கிறார். இதில் மக்கள்தொடர்பு மற்றும் பேருந்து பயணச் சலுகை ஆகிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது,செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணிபுரியும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம கருத்து கேட்கும் நிகழ்ச்சி ஏதும் நடத்தப்படுகிறதா? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பத்திரிக்கையாளர்கள் உடன் பொதுமக்களை சந்திக்கின்றனர். இது மாதந்தோறும் நடைபெற்று வருகிறது பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து, அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்களிடம், அதன் பயன்கள் பற்றிய விவரங்கள் அறிந்து வருகிறார்கள். இந்த நிகழ்விற்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் “நிறைந்த மனம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.