Others
அண்ணாமலை – ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டே ஆகணும்.

- மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீதானவிவாதம்நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும் என்று இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்றும், இந்துக்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு குறித்து மட்டுமே பேசுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.தொடர்ந்து, பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் இந்து மதம் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பை தூண்ட மாட்டார்கள் ஆனால், இந்து என்று கூறிக்கொள்ளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 24 மணி நேரமும் வன்முறையை கோருகிறார்கள்,வெறுப்பைதூண்டுகிறார்கள்,பொய்பேசுகிறார்கள்”என்றுகூறினார்.அப்போதுகுறுக்கிட்டுபிரதமர்மோடி,இதுமிகவும்மோசமானவிஷயம்.அனைத்துஇந்துசமூகத்தினரையும் வன்முறையாளர்கள் என்று கூறுவது மிகவும் தவறானது என்று ராகுல் காந்தியை நோக்கி தெரிவித்தார்.அதற்குசூடாகபதில்அளித்தராகுல்காந்தி,“மோடி,பாஜகமற்றும்ஆர்எஸ்எஸ்மட்டுமேஇந்துசமுதாயம்கிடையாது”என்றுதெரிவித்தார். இதற்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்துக்களை அவமதிக்கும் விதமாக பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித்ஷா உள்பட பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போதும் போல, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனது உண்மை நிறத்தை வெளிப்படுத்த வருகிறது. கடந்த வாரம் செங்கோல்விவகாரத்தைபார்த்தோம்.தற்போதுசிறுபான்மையினரைதிருப்திபடுத்தும்வழிகளைஇந்தியாகூட்டணிகையாண்டுள்ளது”என்றுவிமர்சித்தார்.மக்களவையில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ராகுல் காந்தி, “இதுபோன்ற இழிவான கருத்துக்கள் மூலம் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள். இந்தியா கூட்டணியின் ஈகோவை எவ்வளவு பெரிய தோல்வியும் அடக்கிவிடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்று கடுமையாக சாடியுள்ளார்.