fbpx
Others

அகில இந்திய பா.ஜ.க தலைவர்நிதின் நபின் போட்டியின்றி தேர்வு….

அகில இந்திய பா.ஜ.க தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை அகில இந்திய தலைவர் பதவி என்பது 2ஆண்டுகள் ஆகும். தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2020-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2 முறைஅவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் புதிய தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம்தொடர்ந்துஏற்பட்டுவந்தது.இந்தநிலையில் சமீபத்தில் புதிய செயல் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார்.பா.ஜ.க-வை பொறுத்த வரை செயல் தலைவராக இருப்பவர்கள் புதியதலைவராகதேர்வுசெய்யப்படுவதுவழக்கம்.அப்படித்தான்ஜே.பி.நட்டாவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை டெல்லியில் உள்ள கட்சியின்தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய செயல் தலைவர் நிதின் நபின்மதியம் 12 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வுசெய்ய வேண்டும். போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். அந்தவகையில் நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. நாளை மறுநாள் அவர் புதிய தலைவராக பதவி ஏற்பார் என்று கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்கஇருக்கிறார்கள். அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்கள்.


Related Articles

Back to top button
Close
Close