அமைச்சர் சேகர்பாபு–மயக்க நிலையில் செந்தில் பாலாஜி….
அமைச்சர் செந்தில் பாலாஜிமயக்கநிலையிலேயே இருக்கிறார்எனஅமைச்சர்சேகர்பாபுதெரிவித்துள்ளார் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்செந்தில்பாலாஜிஅமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியின் உடல் நலம் விசாரித்து விட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, “அமைச்சர் செந்தில் பாலாஜி ICU-வில் சுய நினைவில்லாமல் உள்ளார். நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை, அவர் காது அருகே வீக்கம் உள்ளது. நிச்சயமாக துன்புறுத்தப்பட்டிருப்பார், அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக இருதய தீவிர சிகிச்சைபிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி கண் திறந்து பதில் சொன்ன பிறகு தான் என்ன நடந்தது என தெரியவரும். இந்த சலசலப்புக்கெல்லாம் திமுக அஞ்சாது. இது போன்ற பல சோதனைகளை திமுக பார்த்துள்ளது, பயம் கிடையாது,” என்று பேசியுள்ளார்..