எல். ஐ. சி முகவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்.
செப்:02 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மதுரை எல் ஐ சி முகவர்கள் கோட்டத்திற்கு உட்பட்ட உத்தமபாளையம் எல் ஐ சி கிளையின் அனைத்து சங்க முகவர்கள் சார்பில் தலைவர் கே கதிரேசன் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்றன.இந் போராட்டத்தில் வரவேற்ப்புரையாக செயலாளர் சுதாகர், மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர் மேலும் இந்த தொடர் போராட்டத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு பாலிசிதாரர் களுக்கு போனசை உயர்த்தி வழங்கிடவும், சி எஸ் டி யை முற்றிலும் நீக்கிட வேண்டியும், பாலிசிதாரர்கள் வாங்கும் கடனுக்கு உரிய வட்டியை குறைக்க வலியுறுத்தியும், மேலும் பாலிசிதாரர்களுக்கு இறுதி கூடுதல் போனஸ் வழங்கிட வேண்டியும் இந்த தொடர் போராட்டம் நடைபெற்றன. இந்த தொடர் போராட்ம் செப்டம்பர் 1 ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர், மேலும் கோரிக்கைகள் நிறை வேறாத பட்சத்தில் மேல்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைப்படி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர் பொருளாளர் தெய்வ ராஜ் நன்றி உரையாற்றினார்.