Others
தேனி–எண்டபுளி ஊராட்சி மன்றம்பாரத பிரதமர் வீடு கட்டும்PMAY திட்டம்–செய்தி
தேனி மாவட்டம் ஜூன். 17 பாரத பிரதமர் வீடு கட்டும்PMAY திட்டத்தில் (கிராமம் ) வீடுகட்டிவரும் பயனாளிகள் விரைந்து வீடு கட்டி முடிக்க கோரி அறிவுறுத்தியும், பொருளாதார ரீதியாக மேற்படி திட்டத்தின் கீழ் ஆணை பெற்று வீடு கட்ட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு மாற்று ஏற்பாடு மூலம் உதவி செய்யும் பொருட்டும் பயனாளிகளுக்கு எண்டபுளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று உதவி திட்ட அலுவலர் மருதப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், ஆகியோர் தலைமையில் அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது எண்டபுளி ஊராட்சி மன்ற தலைவர் எல்.எம். சின்னபாண்டியன், கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், ஊராட்சி செயலாளர்கள் பிச்சைமணி, ஜெயபாண்டி, மீனா ஆகியோர் உடனிருந்தனர்.