தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன்காலமானார்…
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்; பீலா வெங்கடேசனை இழந்து வாடும் அவரது குடும்புத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்”எனமுதலமைச்சர்தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56) உடல் நலக் குறைவால் காலமானார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைசெயலாளராகபணியாற்றியவர்.இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும்இரங்கல்தெரிவித்து வருகின்றனர்.பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும். பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.