தந்தையை தூக்கி சென்ற மகன் – வைரலான வீடியோவால் போலீஸ் மீது வழக்கு பதிவு

கேரளாவில் புனலூரிலு உள்ள மருத்துவமனையில் இருந்து விடுவித்த தன் தந்தையை ஆட்டோ மூலம் வீட்டிற்கு அழைத்து வந்தார் அவரின் மகன்.
வரும் வழியில் போலீஸ் தடுத்ததால் தன் தந்தையை தன் கைகளாலேயே தூக்கி சுமந்து கொண்டு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ள மாவட்டம் குளத்து பகுதியைச் சேர்ந்த முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், புலத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது உடல்நலம் சரியான பின் மருத்துவமனையில் இருந்து விடுவித்த அந்த முதியவரை அவரின் மகன் ஒரு ஆட்டோ மூலம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ஊடரங்கு காரணமாக போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர்.
முதியவரின் மகன் மருத்துவமனை ஆவணங்களையும் போலீஸ் யிடம் காட்டியும், செல்ல அனுமதிக்காததால் வேறு வழியின்றி மகனே தந்தையே தன் கைகளால் சுமந்து வீடுவரை தூக்கிச் சென்றுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிற நிலையில் இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தானாகவே வழக்கு பதிவு செய்துள்ளது.
V. NandhiniPrakash