ECR சாலை விரிவாக்கம் விரைவில் திறக்கப்படும்…
நெடுஞ்சாலைத்துறையின் தகவல்படி, 1.2 கி.மீ. தூரத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. நில ஆவணங்களில்சிலகுறைபாடுகள்இருந்தன.அவைசரிசெய்யப்பட்டுவிட்டன.நிலஉரிமையாளர்களுக்குவிரைவில்இழப்பீடுவழங்கப்படும்என்றுஒருஅதிகாரிதெரிவித்தார்.திருவான்மியூர் முதல் அக்கரை வரைசாலையைஅகலப்படுத்தும்திட்டம்2005ஆம்ஆண்டிலேயே₹10கோடிஒதுக்கீட்டுடன்அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஏராளமான சிறு சொத்துக்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் நில உரிமை மாற்றங்கள் போன்ற காரணங்களால் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.2018-19 ஆம் ஆண்டில் இத்திட்டம் வேகம் பெற்றது. அப்போது முடிந்த இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பணிகள் ஸ்தம்பித்தன. கடந்த ஆண்டுதான் மீண்டும் வேகமெடுத்தது.ECR குடியிருப்பாளர்கள் கூறுகையில், சாலை விரிவாக்கத்தால் வாகனங்கள் வெளிப்புறப் பாதைகளில் நிறுத்தப்படுகின்றன. “நாங்கள் இன்னும் நடுவில் உள்ள இரண்டு பாதைகளில்தான் ஓட்டுகிறோம். நடுப்பகுதி கட்டுவதற்கு முன்பு வாகனங்களை முந்த முடிந்தது. ஆனால் இப்போது அது சாத்தியமில்லை, அதே மெதுவான வேகத்தில் தான் பயணிக்கிறோம். சிறந்த போக்குவரத்து ஒழுங்குமுறைதான் தேவை.கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நேராக இல்லாததால் சாலைகள் வளைந்துள்ளன. அவற்றோடு செல்லும் மழைநீர் வடிகால்களும் வளைந்துள்ளன என்று குறிப்பிட்டார். “இஞ்சம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் அருகே உள்ள மண் குவியல்களில் புற்கள் வளர்ந்துள்ளன. மேலும், புதிதாக கட்டப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையிலேயே நடக்க வேண்டியுள்ளது, என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இது போக பக்கிங்ஹாம்
கால்வாய்க்கு குறுக்கே அமைக்கப்படவுள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) – ஓல்ட் மகாபலிபுரம் சாலை (OMR) இரும்பு இணைப்புப் பாலத்திற்கான திட்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய சாலை தோராயமாக 1.465 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது தோராயமாக நான்கு வழிப்பாதையாகவும், இருவழிப் போக்குவரத்து வசதி கொண்டதாகவும் அமையவுள்ளது. தற்போது தோரைப்பாக்கம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் அப்பகுதி போக்குவரத்து நெரிசலைக் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்படவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ECR-OMR இணைப்புச் சாலைப் பாலத்திற்கான CRZ அனுமதிக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் மீது இதற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. தொரைப்பாக்கம் (ஓஎம்ஆர்) முதல் நீலாங்கரை (ஈசிஆர்) ஆகியவற்றை இணைக்கும் இரும்புப் பாலத்தை ₹37 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்க உள்ளது. இதற்கான டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் bund மற்றும் அப்ரோச்சாலைகள்அமைக்கப்படும்.