தமிழக முதல்வரின் கவனம் .. சத்தியமங்கலம் பக்கம் திரும்புமா…?
சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்.சரவணன் மீது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம்! விவசாயிகளுக்கு விரோதம், குற்றவாளியுடன் கூட்டு, எப்படி கிடைக்கும் நியாயம் ? பயிரை மேயும் வேலியால்பரிதவிக்கும் விவசாயிகள்!)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திற்கு அனுமதி கேட்கும் போது அதனை மறுத்து போராட்டம் நடத்துவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் கடிதம் கொடுக்கும் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் சரவணன் ..,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி தாளவாடி போன்ற பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிழல் மாஃபியாவாக செயல்படும் முன்னாள் சட்டமன்ற பி எல் சுந்தரம் , ஆயிரக்கணக்கான நபர்களை அழைத்து வந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது எப்படி? 100 நாள் பணியாளர்களின் அறியாமையை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் வண்ணம் ஆயிரக்கணக்கான அப்பாவி நூறு நாள் விவசாய கூலிகளை, வட்டாட்சியர் அலுவலகத்தில் திரள செய்து போராட்டம் நடத்தியதன் மூலம், சத்தியமங்கலம் நகரத்தில் நான்கு ஐந்து மணி நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு இடையூறாக இருந்த பிஎல் சுந்தரதுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கினார் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் ?. பி.எல். சுந்தரம் முன்னாள் சத்தியமங்கலம் வட்டாட்சியர்ரவிசங்கருடன் கூட்டுச் சேர்ந்து புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் பகுதிகளில் நிபந்தனை பட்டாக்களை சட்டவிரோதமாக அயன் பட்டாவாக மாற்றியது சம்பந்தமாகவும்,ஏழை எளிய தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை சட்டவிரோதமாக தனது பினாமிகள் மூலம் விற்பனை செய்தது சம்பந்தமாகவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புகார் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களின் சொத்துக்களை தனது பினாமிகள் மூலம் சட்டத்துக்கு புறம்பாக தன் அதிகாரத்தை பயன்படுத்தி எழுதி வாங்கியதன் மூலம் பல்வேறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர், அவ்வகையில்P.L.சுந்தரம்கட்டப்பஞ்சாயத்திற்குகாவல்துறைதுணைகண்காணிப்பாளர்.சரவணன் உறுதுணையாக இருக்கிறார், அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக புஞ்சைபுளியம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்ட ஒரு சட்ட விரோத ஆவணம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பி எல் சுந்தரம் தொடர்புடைய நபர்கள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கைது நடவடிக்கும் செய்யப்பட்டுள்ளது, அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் தற்போது பிஎல் சுந்தரம் சம்பந்தம் இல்லாமல் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை அழைத்து வந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட வேண்டிய அவசியம் என்ன?,
இந்தப் போராட்டத்திற்கு சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் எவ்வாறு அனுமதி கொடுத்தார்? சாதாரணமாக விவசாயிகள் தங்கள் நேர்மையான கோரிக்கையை வலியுறுத்தி கேட்கும் உண்ணாவிரத போராட்ட அனுமதியைக் கூட மறுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் போராடியும் விவசாயிகளை சந்திக்க மறுத்ததுடன்போராட முயன்ற விவசாயிகளை குண்டு கட்டாக கைது செய்ததுடன் அவர்களின் 98 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இப்போது என்ன செய்து கொண்டு இருந்தார்? பவானிசாகர் அணை பகுதியில் வண்டல் மண் எடுப்பதற்காக போராடிய விவசாயிகளுக்கு இடையூறு செய்த அரசியல் கட்சியினரை விட்டு விட்டு விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்த சரவணன் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தார்?,இவ்வாறு காழ்ப்புணர்ச்சியுடன் விவசாயிகள் மீதுவிரோத போக்குடன் செயல்படும் சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகின்றனர்…