தேனி-உயிரிழப்பை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்…?
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே 25/11/2023 இன்று காலையில் அரசு பேருந்து அவ்வழியே வந்த பயணிமீது மோதி தலைமீது ஏறி மாபெரும் விபத்து ஏற்பட்டது.. இதில் பயணிதலைமீது பஸ் ஏறியதில் மூளை கன்னாபின்னா என சிதறிக் கிடந்தது, மேலும் விபத்திற்குள்ளாளான பயணியின் தலையையே காணவில்லை… கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இதேபோல் , இதே இடத்தில் ஒரு தனியார் பேருந்து மூலம் ஞானவேல் என்பவர் விபத்தால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!!! இவற்றிற்கெல்லாம் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதைதான்…? பஸ் நிலையத்தில் வாகனங்கள் நுழையும் பொழுதும், வெளியேறும் போதும் சிறிது மெதுவாக செல்லலாமல்லவா ஏன் நான் முந்து நீ முந்து என போட்டா போட்டி போட்டுக்கொண்டு மக்களின் உயிர்களை பலி கடா ஆக்குகின்றனர்…..இனி இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி