fbpx
Others

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது…

தமிழக சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதைத் தொடர்ந்து அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அந்தபட்ஜெட்கூட்டத்தொடர்ஏப்ரல்21ம்தேதிவரைநடந்தது.தொடர்ந்துசட்டப் பேரவைதேதிகுறிப்பிடப்படாமல்தள்ளிவைக்கப்பட்டது சட்டசபை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி இம்மாதம் 20ம் தேதிக்குள் சட்டசபையை கூட்ட வேண்டும். இந்த நிலையில் தமிழக சட்டசபை அக்டோபர் மாதம் 9ம் தேதி( நாளை) காலை 10 மணிக்கு கூடும் என்று கடந்த மாதம் 20ம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.அதன்படி தமிழக சட்டப்பேரவை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் நாளை காலை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து வினாக்கள்-விடைகள் நேரம் தொடங்கும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவைக்கு தாக்கல் செய்வார்.பின்னர் அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவார். தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்உத்தரவுப்படிதமிழகத்திற்கு  தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி ஒன்றிய அரசை வலியுறுத்த, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோருவார். அந்த தீர்மானம் எதிர்க்கட்சியான அதிமுக உள்பட அனைத்து கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்படும். தொடர்ந்து நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். அனேகமாக சட்டப்பேரவை 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது   .நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இதனால், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது. மேலும் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின்பல்வேறுஅறிவிப்புகளைவெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும்எதிர்க்கட்சிகள்எழுப்பும்பிரச்னைகளுக்கு பதிலடிகொடுக்கஆளும்கட்சியினரும்தயாராகஇருப்பார்கள்மேலும்எதிர்க்கட்சி  துணைதலைவர்இருக்கைவிவகாரம்தொடர்பாகஅதிமுகவிவினர்சட்டப்பேரவையில் வலியுறுத்தக்கூடும் என்று தெரிகிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை கூடுவதை முன்னிட்டு தலைமை செயலகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close