fbpx
Others

ரஷ்யா —கேன்சருக்கு வருகிறது தடுப்பு வேக்சின்…

புற்றுநோயியல் மருத்துவத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக, ஸ்புட்னிக் V கோவிட்-19 தடுப்பூசியை ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. உலகின் முதல் mRNA அடிப்படையிலான கேன்சர் தடுப்பூசி ஆகும் இது.இந்தக் தடுப்பூசிக்கான மனித மருத்துவப் பரிசோதனைகள் அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இது புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு உள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் மனித மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.கமலேயா மையத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், இந்த தடுப்பூசி தனிப்பட்ட நோயாளிகளின் நோய் அடிப்படையில் மாற்றி அமைக்க கூடியது. நோயாளியின் கட்டிகளின் உள்ள மரபணு அமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.,ரஷ்யாவின் முன்னணி புற்றுநோய் நிறுவனங்களுடன் இணைந்து 2025 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்குள்ளாகவே சோதனை ரீதியான பயன்பாடுகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மெலனோமா மூலம் ஏற்படும் புற்றுநோய்க்கும் இதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். மெலனோமா என்பது தோலுக்கு நிறம் வழங்கும் மெலனோசைட் செல்களில் இருந்து உருவாகும் ஆபத்தான தோல் புற்றுநோயாகும். இந்த செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து புற்றுநோயாக மாறும்போது மெலனோமா ஏற்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது உடலின் மற்ற பகுதிகளுக்கும் விரைவாகப் பரவி உயிருக்கு ஆபத்தாகலாம்.mRNA, அதாவது மெசஞ்சர் RNA, என்பது மரபணு தகவல்களை DNA-விலிருந்து உயிரணுக்களின் புரத உற்பத்தி அமைப்புக்கு கொண்டு செல்லும் ஒரு மூலக்கூறு ஆகும். இது ஒரு தகவல் தூதுவர் போல செயல்பட்டு, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவையான குறிப்பிட்ட புரதங்களை உருவாக்கக் குறியீடுகளை வழங்குகிறது. தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, mRNA செல்களை மட்டுப்படுத்தப்பட்ட கேன்சர் வைரஸ் பகுதி அல்லது புற்றுநோய் ஆன்டிஜெனை உருவாக்கப் பயிற்றுவிப்போம், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி உடலைப் பாதுகாக்கிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றபடி இந்த வேக்சினை மாற்றிக்கொள்ள முடியும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார்.  வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.கடந்த வருடம் கூட அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது,. இந்த மருந்து வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர். மிக சிறிய அளவில்தான் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், எளிதாக dostarlimab என்ற மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் positron emission tomography என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில்தான் இன்னொரு ஆராய்ச்சியில் இதேபோல் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை கேன்சருக்கு எதிராக செய்துள்ளது. புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கான ஒரு முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறுகளை அதிர வைத்து.. அந்த அதிர்வை வைத்து கேன்சர் செல்களை கொல்லும் மருத்துவத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவ இமேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சாய மூலக்கூறை வைத்துதான் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த மூலக்கூறியில் இருக்கும் அணுக்கள் ஒரே மாதிரியாக அதிர்வுறும் குணம் கொண்டவை. சில ஒளி தூண்டுதலுக்கு இவை ஒரே மாதிரியாக ஒத்திசைவோடு அதிரும். இப்படி ஒரே மாதிரியாக அதிர்வுறும் மூலக்கூறுகள் பிளாஸ்மோன் என அழைக்கப்படும், இந்த பிளாஸ்மோன் கேன்சர் செல்கள் மீது வைக்கப்படும் போது .. அது அகச்சிவப்பு ஒளியால் தூண்டப்படும்போது,​​​​புற்றுநோய் செல்களின் செல் சவ்வு சிதைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்அதாவது இந்த மூலக்கூறுகள் போடும் நடனம் காரணமாக புற்றுநோய் பலியாகிவிடும் என்கிறார்கள். நேச்சர் கெமிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்த முறை 99 சதவீத செயல்திறனைக் கொண்டு இருந்தது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த முறையில் 99 சதவிகித புற்றுநோய் செல்கள் மாறுகின்றனர். மேலும் மெலனோமா கட்டிகளைக் கொண்ட எலிகள் பாதி சிகிச்சைக்குப் பிறகு முற்றிலுமாக குணமடைகின்றன. முற்றிலுமாக இவை புற்றுநோயற்றதாக மாறி உள்ளது. கிட்டத்தட்ட இந்த செல்கள் ட்ரில்லிங் மிஷின் போல செயல்பட்டு கேன்சர் செல்களை 99 சதவிகிதம் வரை கொண்டு கேன்சரை குணப்படுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close