தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரபரப்பு….மக்கள் அதிர்ச்சி..?
கோவில்பட்டி காந்திநகர் முத்து ராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன் இவரது மனைவி பாலசுந்தரி கூலிதொழிலாளர்கள் .இரண்டாவது மகன் கருப்பசாமி வயது 10 பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கிறான் கடந்த நாட்களாக அம்மைநோய் தொற்றுபாதிக்கப்பட்ட கருப்புசாமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து உள்ளார் இந்த நிலையில் நேற்று கார்த்திக் அவர்களும் பாலசுந்தரம் வேலைக்கு சென்று விட்டனர் கருப்பசாமி வீட்டில் இருந்துள்ளான் வீட்டில் இருந்தமகன்கருப்பசாமி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இந்த நிலையில் மேற்கு காவல் நிலைய போலீஸ் தேடிவந்த நிலையில் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக சிறுவன் மீட்கப்பட்டார் .மேலும் சிறுவன் கழுத்தில் இருந்த 12 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு கிராம் தங்க மோதிரம் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை வருகின்றனர் .மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.