Others
விவசாய கண்காட்சி–வேளாண்கல்லூரி மாணவிகள்.. ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..
இராணிப்பேட்டை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கணியனூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்று அறிந்து கொண்ட விவசாயம் சார்ந்த நுட்பங்களின் கண்காட்சி நடத்தினர்.இந்த கண்காட்சியில் செயல்முறை விளக்கம் மற்றும் உயிர் உரங்கள், அதன் பயன்கள், சிறந்த விதைத்தேர்வின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினர். மேலும் கண்காட்சி குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கமளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்கள். மற்றும் இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


