வந்தே பாரத் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி…..
திட்ட தொடக்க விழாவிற்காக காந்திநகர் ரயில் நிலையத்துக்கு இன்று காலை பிரதமர் வந்த நிலையில், அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் உடன் இருந்தனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதன் வசதிகளை கேட்டறிந்து பார்வையிட்டார். பின்னர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-ன் இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். தொடர்ந்து காந்திநகர் மற்றும் மும்பை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரசின் புதிய & மேம்படுத்தப்பட்ட ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். ரயில்வே ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உட்பட தனது சக பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். தொடர்ந்து அகமதாபாத்தில் ரூ.7,200 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கிவைத்தார்..