வணிக போராளி த. வெள்ளையன் வரலாற்று நூல்!! சிறப்பு செய்தி.
வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில்! வணிக போராளித. வெள்ளையன் வரலாற்று நூல்!!வை.கோ. எம்.பி. வெளியிட்டார்!!!வணிகர் சங்கங்களின் பேரவை 42 வது மாநில மாநாடு தாம்பரம் அருகே உள்ள படப்பையில் சமீபத்தில் நடந்தது.மாநாட்டில் சுதேசி நாயகன், வணிகப் போராளி.த. வெள்ளையன் வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.திருவள்ளூர் மாவட்ட வணிகர் சங்க செயல் செயலாளர்.வி. எஸ். லிங்கம் எண்ணத்தில் உருவான தொடர் போராட்ட வரலாற்றை தொகுத்து என். எஸ். பிரதாப்சந்திரன் மூலமாக தயாரித்த வரலாற்று நூலை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர். வை.கோபால்சாமி எம்.பி. வெளியிட்டார். மாநில வணிகர் சங்க தலைவர். எஸ். சௌந்தர்ராஜன், பொதுச் செயலாளர் வெ.மெஸ்மார்க் காந்தன் வெள்ளையன், இரா. முத்தரசன்(இ. கம்)பி. சண்முகம்(வ. கம்) ஆகியோர்பெற்றுக்கொண்டனர்.
வணிகர்கள் சங்க அகில இந்திய தலைவர். மிஸ்ரா, விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர. தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர். வேல்முருகன்,
மே 17 இயக்க தலைவர். திருமுருகன் காந்தி, ம. தி. மு. க துணை பொது செயலாளர். மல்லை சத்யா, வணிகர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர். மணலி. சண்முகம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வணிகர்கள் சங்க செயலாளர். ஷேக் அகமது எஸ். ஏ. தாஜுதீன் உட்பட பலருக்கு வரலாற்று நூல் வழங்கப்பட்டது.வணிக போராளி த. வெள்ளையன் கடந்து வந்த போராட்ட வரலாற்றை தொகுத்து வெளியிட அயராது பாடுபட்ட வி. எஸ். லிங்கத்தை ம.தி.மு.க பொது செயலாளர். வை.கோ. மிகவும் பாராட்டினார்
