ராணிப்பேட்டை–வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையமும் மத்திய பிஜேபி அரசும் இணைந்து நடத்தும் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர்பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை திருட்டு ஓட்டை கண்டித்து பொது மக்களிடம் கையெழுத்து பெரும் நிகழ்வை தொடங்கி வைத்து தனது கையொப்பத்தை பதிவிட்டார் தொடர்ந்து பாஜகவின் தேர்தல் தில்லு முலுகலை கண்டித்து கண்டன உரையாற்றினார்..தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவரும் கிராம காங்கிரஸ் கமிட்டி கோட்டம்-3 மண்டல ஒருங்கிணைப்பாளர் குலாம் மெய்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர் அட்வகேட் அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் ஆற்காடு நகரத்தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றனர் மாவட்ட துணைத் தலைவர் ஜி விநாயகம் மாவட்ட பொதுச் செயலாளர் வேலூர் நந்தகுமார் மேச்சேரி பன்னீர்செல்வம் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர்நிஷாத் அஹமத் மாவட்டச் செயலாளர் தீபன் நிர்மல் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.
ஆற்காடு ஒன்றிய தலைவர் வீரப்பா திமிரி ஒன்றிய தலைவர்கள் லீலா கிருஷ்ணன் ராமதாஸ் காவனூர் சீனிவாசன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா மாவட்டத் தலைவர் முன்னிலை வகித்தனர் திமிரி நகரத் தலைவர் கோபு கலவை நகர தலைவர் விநாயகம் விளாபாக்கம் நகரத் தலைவர் பெருமாள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது கையெழுத்தை பதிவு செய்தனர்.