ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் வகையில் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தின் குமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசத்தில் நிறைவு பெற்று, தற்போது ராஜஸ்தானில் 104 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது.இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதிய கடிதத்தில்; ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும். கோவிட் நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடை பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Read Next
Others
15 hours ago
2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு….!
Others
1 day ago
இன்றைய தேவசெய்தி 26 / 4 / 24
5 hours ago
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு..
5 hours ago
வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது….உச்ச நீதிமன்றம்
5 hours ago
அரசுஅலுவலகங்களை திறக்க விரைவில் தேர்தல் ஆணையம் முடிவு..
14 hours ago
நாயுடு மகாஜன நல சங்கத்தின்38 ஆம் ஆண்டு யுகாதி பண்டிகை… சிறப்பு செய்தி.
15 hours ago
2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு….!
15 hours ago
மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம்..
15 hours ago
ராகுல் காந்தி—பிரதமர் மோடிவிரைவில்கண்ணீர்விடுவார்….
1 day ago
2-ம் கட்ட தேர்தல்–வாக்குப்பதிவுநடைபெற்று வருகிறது..
1 day ago
நீடாமங்கலம்-ஶ்ரீ சந்தான ராமர் திருகோயில்..செய்தி.
1 day ago
இன்றைய தேவசெய்தி 26 / 4 / 24
Related Articles
தேவ செய்தி 25 / 4 / 24
2 days ago
சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து தரமற்றவை…
2 days ago
புழலில்ஒருவருக்கு அரிவாள் வெட்டு
2 days ago