முதல் முறையாக திமுக மாணவரணி செயலாளராக ஜெ.வீரமணி என்ற பெண் நியமனம்..
திமுக மாணவரணி செயலாளராக முதல் முறையாக ஜெ.வீரமணி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. 2021ம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 2025ம் ஆண்டு திமுகவின் மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.நேற்றுமுன்தினத்துடன்அவர்திமுகமாணவரணிசெயலாளராகநியமிக்கப்பட்டுஓராண்டுநிறைவடைந்தது.இதுகுறித்து ராஜீவ் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘திமுகவின் உயர் பொறுப்புகளில் ஒன்றான திமுகவின் மாணவர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கி, பணியாற்ற வாய்ப்பளித்த முதல்வர், துணை முதல்வருக்கு என்றென்றும் நன்றிஉடையவனாக இருப்பேன்.முதல்வரின்முத்தானதிட்டங்களைதுண்டறிக்கைகள்மூலம்கல்லூரிமாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது, கல்லூரி மாணவர்கள் சந்திப்பு, கட்சி பணியில் மாணவர்களை
ஒருங்கிணைத்துசெயலாற்றியதுஎனதொடர்ந்துதிமுகமாணவர்அணியைஆக்கப்பூர்வமானபணிகளில்ஈடுபடுத்தியிருக்கிறோம்” என்றும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுவெளியிட்ட சில மணிநேரங்களிலேயே அவர்அந்தபதவியில்இருந்துமாற்றப்பட்டார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,‘திமுகமாணவர்அணி துணைச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ.வீரமணி மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக மாணவர் அணியின் வரலாற்றிலேயே செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையை வீரமணி பெற்றுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், திமுக மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி, அப்பொறுப்பிலிருந்துவிடுவிக்கப்பட்டு,திமுககொள்கைப்பரப்புஇணைச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.