Others
மதுரை–கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 205.வழக்குகள் பதிவு.
மதுரையில் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பொதுவாக தமிழ்நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையின்போது, விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசுதடுத்தல்,பட்டாசுவெடிக்க,காலை6முதல்7மணி,மாலை7முதல்8மணிஎன,நேரகட்டுப்பாடுவிதிக்கப்பட்டுஇருந்தது.இதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததால்நடவடிக்கைஎடுக்கப்படும்எனகாவல்துறையினரும்எச்சரிக்கைவிடுத்துஇருந்தனர்.இந்நிலையில், மதுரை மாநகரில் கடந்த 11-ம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்ததாக 6 வழக்கு பதிவு செய்யப்பட்டன. இது போன்ற தீபாவளிதினத்தன்று141வழக்குகளும் என மொத்தம் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசுவிதிமுறை யை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. மாநகரம் நீங்கலாக மாவட்டத்தின் இதர பகுதிகளில், நேரக் கட்டுபாட்டை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 58 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர்.