புழல் சிறையில் கோழிப் பண்ணை….!
சென்னையின் மத்திய பகுதியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புழல் சிறை. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 212 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் முதல் பகுதியில் குற்றவாளிகளும், இரண்டாம் பகுதியில் ரிமாண்ட் செய்யப்பட்ட கைதிகளும், பெண்களுக்கென பிரத்யேக சிறையும் அமைந்துள்ளன.மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய தனி இடம் இருக்கிறது. இதுதவிர தியான மண்டபம், சமையலறை, நூலகம், ஆம்பி தியேட்டர், ஆடிட்டோரியம், ஜெயில் கொர்ட், வீடியோ கான்பரன்சிங் வசதி, உயர் பாதுகாப்பு பகுதி, உடற்பயிற்சி கூடம், கேண்டீன், பொது இசை கட்டமைப்பு, புத்துணர்ச்சி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில் புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு தேவையான அசைவ உணவை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கு உள்ளேயே கோழிப் பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை கைதிகள் சிலர் ஒன்று சேர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த சிறையில் வாரந்தோறும் புதன் மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் ஒவ்வொரு கைதிக்கும் சாதமும், 150 கிராம் சிக்கன் குழம்பும்
பரிமாறப்படுகிறது.அப்படிபார்த்தால்வாரந்தோறும்1,350கிலோசிக்கன்தேவைப்படுகிறது.முன்னதாக சிறை மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜ் மற்றும் ஜெயிலர் சாந்தகுமார் மற்றும் கோழிப் பண்ணைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கைதிகள் சிலர் ஒன்று சேர்ந்து கடந்த அக்டோபர் 2024ல் கோழிப் பண்ணை ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். 40 நாட்கள் தீவிர முயற்சியின் விளைவாக இதனை உருவாக்கியுள்ளனர். இதற்காக தனியார் பண்ணையில் இருந்து வாங்கி புழல் சிறை பண்ணையில் விட்டுள்ளனர். இந்த கோழிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் கால்நடைஅதிகாரிகளும்அவ்வப்போதுவருகைபுரிகின்றனர்.கோழிப் பண்ணையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் சிறையில் உள்ள பயோ கேஸ் யூனிட்டில் போடப்படுகின்றன. புழல் சிறையின் தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவது பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.