Others
புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கட்டுப்பாடு…?
புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான விதிகளில் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் வழிகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன், கல்வி நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்தால், அதனை பரிசீலனை செய்து, 30 நாளுக்குள் தீர்வு காண வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.