fbpx
Others

பிரேமலதா–சி.​வி.சண்​முகம்அநாகரி​க​மாகப் பேசி​யதுகண்டித்தக்கது….

பெண்களை இழிவுபடுத்தினால் பெண்களையே திரட்டி போராட்டம் நடத்துவேன் :  சி.வி.சண்முகம் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்சட்​டம் – ஒழுங்கு சீர்​கேடு மற்​றும் பெண்களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ள​தாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சி​யினர் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர்.விழுப்​புரத்​தில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பேசிய அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம், நடிகை ஒரு​வரின் பெயரைக் குறிப்​பிட்டு அநாகரி​க​மாகப் பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது.இந்​நிலை​யில்,சென்​னை​யில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்​டாடிய தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா, பின்னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் பெண்களுக்கு பாது​காப்பு இல்லை என்று சொல்லி நடந்த ஆர்ப்​பாட்​டத்தில் ஒருவர் நடிகைக்கு எதிராக அநாகரிகமாக பேசியது கண்டித்தக்கது.எந்​தப் பெண்ணாக இருந்​தா​லும் எந்த சாதி, மதமாக இருந்​தா​லும் ஒரு பெண்ணை தரக்​குறை​வாக பேசுபவர்​கள் யாராக இருந்​தா​லும் நிச்​சய​மாக கண்​டிக்​கப்பட வேண்​டிய​வர்​கள். அவர்​கள் குடும்​பத்​தி​லும் பெண்​கள் இருக்​கிறார்​கள்.அவர்​களிடம் அந்​தக் கேள்​வியை கேட்​டால் அவர்​கள் ஏற்​றுக் கொள்​வார்​களா? பெண்களை இழிவு படுத்​து​வதை தயவு செய்து இத்​தோடு நிறுத்​திக் கொள்ள வேண்​டும்.இல்​லை​யென்​றால் கட்​சிகள், சாதி​கள்,மதங்​களுக்கு அப்​பாற்​பட்டு ஒட்​டுமொத்த பெண் சக்​தி​களை ஒன்​றாக திரட்டி மிகப்​பெரிய ஆர்ப்​பாட்​டத்தை பெண்கள் சார்​பாக நான் முன்​னெடுப்​பேன். இதில் எந்த மாற்​றுக் கருத்​தும் இல்​லை.ஒவ்​வொரு பெண்ணும் இன்று குடும்​பத்​தின் ஆணிவேர். பெண்களை மதிக்​கும் வகை​யில் தான் நாம், தாய் நாடு, குலதெய்​வம் என்று சொல்​கிறோம். பெண்களை இழி​வுப்​படுத்​து​வது யா​ராக இருந்​தா​லும் மிக​வும் கண்​டிக்​கக்​ கூடியது. இவ்​வாறு தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதாதெரிவித்​தார்​.

Related Articles

Back to top button
Close
Close