பாரதப் பிரதமர்வேண்டுகோள்அதன்படிதூய்மைப்படுத்தும்பணி-செய்தி
காந்தி ஜெயந்தி அன்று பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொது இடங்களை ஒன்று கூடி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பாரதப் பிரதமர். நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், அதன்படி திருவள்ளூர் மாவட்டம்செங்குன்றம்நாரவாரிகுப்பம்அரசுஆரம்பசுகாதாரநிலையத்தைதூய்மைப்படுத்தும்பணிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் .எம் .பி. நரேஷ் குமார்ஏற்பாட்டின்பேரில்புழல்மண்டல்தலைவர்.முரளிகிருஷ்ணன்தலைமையில்நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு தொண்டர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி அடர்ந்து முளைத்திருந்த செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம் தமிழக அரசு பொது இடங்களில் தூய்மையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை நாரவாரி குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மழைநீர் வடிகால் நீர் தேங்கி கொசு உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது. பொது மருத்துவம். மகப்பேறு மருத்துவம் பார்க்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜகவின் சொந்த செலவில் மேம்படுத்தி தர தயாராக உள்ளதாகவும். அதை தமிழக அரசு தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.