fbpx
Others

நீதிபதி ஜெயச்சந்திரன் –மத்திய அமைச்சர் ப்ரஸ் மீட்டில் மன்னிப்பு கேட்கணும்.

Shobha Karandlaje Case கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்தவர் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே. பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷோபா, தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று வந்து பெங்களூருவில் வெடி குண்டு வைக்கின்றனர் என்று குற்றம்சாட்டியது சர்ச்சைகளை உருவாக்கியது தமிழர்கள் மற்றும் கன்னடர்கள் இடையே மோதல் உருவாக்கும் வகையில் பேசிய ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் பேரில் ஷோபா மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த சூழ்நிலையில் தன் மீதான வழக்கைரத்துசெய்யவேண்டும்எனஷோபாகரந்தலாஜேசென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் தான் தமிழர்களை அவதூறாக பேசவில்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஷோபா மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படுமா என தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததுஅப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்க தயாராக இருக்கிறோம். மேலும், தனது பேட்டிக்கு மன்னிப்பு கோருகிறேன் என்றும், தமிழ் மக்கள் மீது மரியாதைவைத்துள்ளேன், இனி இதுபோல பேச மாட்டேன் ஷோபாதெரிவிக்கவேண்டும்”எனவலியுறுத்தினார்.ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறோம்” என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால்தான் சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி ஜெயச்சந்திரன், அதற்குள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரி, அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஷோபா தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close