நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்…

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் அவர்கள் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றதுகூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சியில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை அதிக அளவில் நட்டு வளர்ப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இயக்க ஒருங்கிணைப்பாளர் நேரு அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுபுதிய ஒருங்கிணைப்பாளராக வை.செல்வராஜ் அவர்களும், துணைத் தலைவராக கே ஆர் செல்வராஜ் அவர்களும் துணை செயலாளராக செந்தில்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .இயக்கத்தின் 2023- 24 ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.நெகிழிப்பை பயன்பாடுகளைகுறைத்தல்,நீர்நிலைபாதுகாப்பு,குடிநீரைசிக்கனமாகபயன்படுத்துதல்,சுற்றுச்சூலை மாசுபாடு இல்லாமல் பாதுகாத்தல்தொடர்பாகபொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டதுமுன்னதாக செயலாளர் ஜெகதீஷ் பாபு வரவேற்றார்ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றிஉரையாற்றினார்.
அரசு செய்திகளுக்காக சுரேஷ் நீடாமங்கலம்