நீடாமங்கலம்–இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 141 வது துவக்க ஆண்டு —-சிறப்பு செய்தி..
நீடாமங்கலம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 141 வது துவக்க ஆண்டு முன்னிட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் செந்தில் பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் நீலன். அசோகன் என்.ஆர். பாலகிருஷ்ணன் வலங்கைமான் அரவத்தூர் மணி, வலங்கைமான் வட்டாரத் தலைவர் சத்தியமூர்த்தி, நீடாமங்கலம் நகர தலைவர் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் ரஹ்மத்துல்லா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜகிரி அய்யம்பேட்டை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் சபீர் முகமது அவர்கள் நீடாமங்கலத்தில் இருந்து சென்னை மத நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தி நடை பயணம் மேற்கொண்டார் அதன் துவக்க விழாவும் நடைபெற்றது நிகழ்ச்சியில் எடக்கீழையூர் அசோகன் ஆசிரியர் ராதா கொட்டையூர் செல்வம் பெரம்பூர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.