நியூயார்க்–ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி – கின்னஸ் சாதனை படைத்தது நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஐ.நா.சபை வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா செய்தார். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று யோகா செய்தனர். இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி, ‘அதிக நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி’ என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் யோகா செய்தார் பிரதமர் மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஐ.நா.சபை வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா செய்தார். இந்த யோகா நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியில் சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று யோகா செய்து வருகின்றனர். சர்வதேச யோக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் – ஐ.நா.வில் பிரதமர் மோடி பேச்சு அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.சபை வளாகத்தில் நடக்கும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- சர்வதேச யோக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகவும், மேலும் ஆரோக்கியமாகவும் ஆக்குவோம். இந்தியாவின் பழமையான பாரம்பரியமான யோகா உலகளாவியது. யோகா என்றால் ஒன்றிணைவது, அனைவரும் ஒன்றிணைவது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு. ஒட்டுமொத்த உலகமும் யோகாவிற்காக மீண்டும் ஒன்று கூடுவதைப்பார்ப்பது அபூர்வமானது. உங்கள் அனைவரையும் இங்கு ஒன்றிணைத்துள்ளது யோகா. எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி. சிறு தானியங்கள் நம் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம் என பிரதமர் மோடி கூறினார்.