fbpx
Others

தேனி–கஞ்சா கடத்தல் வியாபாரம் படுஜோர்….?

, தேனி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு கஞ்சா கடத்தல் வியாபாரம் படுஜோர்….. மாவட்ட ஆட்சியர், காவல்துறை என்ன செய்கிறது??? தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகள் கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகளுக்கு. மிகவும் வசதியாக போய்விட்டது! கஞ்சா விற்பனை மிகவும் படுஜோராக விற்பனை செய்வது, கஞ்சாவை சமூக விரோதிகள் ஆட்டோவில் கடத்தி அருகிலுள்ள பகுதியில் விற்பனை செய்தும் வருகின்றனர்…. ஆனால் இவற்றை மாவட்ட காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பது போல் தோன்றுகின்றது.என்ன செய்து கொண்டு இருக்கிறது மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும்? அடிக்கடி ஒரு குறிப்பிட்ட ( TN65 AA 1279 ) இந்த இலக்கம் கொண்ட ஆட்டோவில் கஞ்சா கடத்துவது காவல்துறைக்கு தெரியுமா? அல்லது இவர்களின் மூலமாக மாமூல் பெற்றுக் கொண்டு கண்டும் காணாதது போல் இருக்கிறார்களா என்று தேனி மாவட்ட அகில இந்திய விவசாய அமைப்பு கேள்விகளை முன் வைக்கிறது! உடனடியாக இது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா ? அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக பொது மக்கள் மற்றும் விவசாய அமைப்பினரை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என்று அகில இந்திய விவசாய அமைப்பு வேண்டுகோள்விடுக்கின்றது!….. …….யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close