fbpx
Others

தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றுப்பாலத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து…

Ambulance carrying patient from Theni to Madurai private hospital overturns on road தேனியை சேர்ந்த பெண் மேல் சிகிச்சைக்காக தனது உறவினர்கள் இரண்டு பேருடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேனியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற கார் திடீரென ஆம்புலன்ஸ் முன்னே திரும்பியதால் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் பாலத்தின் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதுஇதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பெண் நோயாளி அவருடன் வந்த உறவினர்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்டனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய பெண் நோயாளி மற்றும் உறவினர்களை மாற்று ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.வைகை ஆற்று பாலத்தின் தடுப்புகளை மோதி நின்றதால் பெரிய அசம்பாவிதமும் இன்றி சிறிய காயத்துடன் ஆம்புலன்சில் பயணித்த நோயாளிகள் உட்பட நான்கு பேர் தப்பித்தனர். இந்த விபத்துக் குறித்து கானாவிளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் கவிழ்ந்து கிடக்கும் ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இந்த விபத்தினால் குன்னூர் ஆற்றுப்பாலத்தில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.முன்னதாக கடந்த பிப்ரவரி 21ம் தேதியும் விபத்து ஏற்பட்டது. தேனி மாவட்​டம் போடியி​லிருந்து பிப்ரவரி 21ம் தேதி காலை மதுரை நோக்கி தனி​யார் பேருந்து 50-க் கும் மேற்​பட்ட பயணி​களு​டன் சென்று கொண்​டிருந்​தது. பகல் 12 மணி​யள​வில் ஆண்டிபட்டியைக் கடந்து டி.பொம்​மி​நாயக்​கன்​பட்டி விலக்கு அருகே பேருந்து சென்​றது. அப்​போது, திரு​மங்​கலத்​தில் திருமண நிகழ்ச்சியை முடித்​து​விட்டு வடு​கபட்டி நோக்கி வந்து கொண்​டிருந்த கார் மீது தனி​யார் பேருந்து நேருக்கு நேர் மோதி​யது. இதில் பேருந்து திசை​மாறி அரு​கில் உள்ள மரத்​தில் மோதி தலைகுப்​புறக் கவிழ்ந்​தது. காயமடைந்த பேருந்து பயணி​கள் 37 பேர், காரில் வந்த 4 பேர் மீட்​கப்​பட்​டு, தேனி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.பலத்த காயமடைந்த அல்லி நகரம் அசோக்​கு​மார் (40), விருதுநகர் கணேஷ்​ராம் (49), பண்​ணைப்​பட்டி போஸ் (30), மேல்​மங்​கலம் ராமையா (79), ஸ்ரீரங்​கபுரம் கணேசன் (62), உத்​தம​பாளை​யம் சுபாஷினி (26) உள்​ளிட்ட 10-க்​கும் மேற்​பட்​டோர் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

Related Articles

Back to top button
Close
Close