Others
தெலுங்கு தேசம்–தேர்தல் அறிக்கையில் மக்களும் கருத்து கூறலாம்.
ஆந்திர மாநிலத்தில் மே மாதம் 13-ம் தேதி, 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதி களுக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறஉள்ளது. இம்முறை தெலுங்கு தேசம் கட்சியுடன், பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இந்நிலையில், தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கூட்டணியில் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படஉள்ளது.இதில்,பொதுமக்களின்கருத்துகள்,ஆலோசனைகளை கேட்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் என்ன? அனைத்து துறையிலும் தேவையான வளர்ச்சி பணிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டியும், மக்களையும் தேர்தல் வாக்குறுதியில்பங்கேற்க செய்யும்படியானஒருபுதியசிந்தனையைஇந்தகூட்டணிஅறிமுகப்படுத்தியுள்ளது.இதற்காக ’மக்கள் தேர்தல் அறிக்கை’ எனும் பெயரில் 83411 30393 என்கிற எண்ணுக்கு குறுந்தகவலோ அல்லது வாட்ஸ் ஆப் செயலியில் இதே எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் மக்கள்ஆலோசனைகளை வழங்க இக்கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது..