தெருவுக்கு தெரு முளைக்கும் கையேந்திபவன்கள்….. ?
தற்போது தெருவுக்கு தெரு கையேந்திபவன்கள் முளைத்து வருகின்றன. இதனால் ஓட்டல் தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் பெரிய ஓட்டல்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கையேந்திபவன்களுக்கு வாடகை கிடையாது. ஜி.எஸ்.டி. வரி இல்லை. வருமான வரி கட்டுவது இல்லை. திறந்தவெளியில் கடைகளை நடத்துவதால் உணவுப் பொருட்கள் மீது தூசு கழிவுகள் படிந்து மக்கள் நோய்வாய் படும் நிலை உள்ளது. ஓட்டல்களில் உணவின் தரம் சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்யும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கையேந்திபவன்களை கண்டுகொள்வதில்லை. வெளிநாடுகளில் அரசு நிலத்தில் ‘புட்கோட்’ (உணவுக்கூடங்கள்) அமைப்பதற்கு இடம் ஒதுக்கி தருகிறார்கள். எவ்வாறு கடையை நடத்த வேண்டும்? என்பது குறித்து பயிற்சி அளிக்கிறார்கள். கடைகளுக்கு வாடகை மட்டும் வசூலித்து கொள்கிறார்கள். அதுபோன்ற நடைமுறைகள் இங்கும் வர வேண்டும். ஓட்டல்கள் மூலம் அரசுக்கு வரி வருவாய் சென்றுக்கொண்டிருக்கிறது. கையேந்திபவன் ஆதிக்கத்தால் பொதுமக்களுக்கு உடல்நலக் குறைபாடு உண்டாகுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கையேந்திபவன்களை முறைப்படுத்த வேண்டும். .