திருநெல்வேலியில் இரு கார்கள் மோதி விபத்து…. குழந்தை உள்பட 4 பேர் பலி..
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு வயது குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீழுர் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையிருந்து, நாகர்கோவில் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த காரில் இரண்டு வயது குழந்தை, இரு பெண்கள் உள்பட 4 பேர் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, வள்ளியூர் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புக் கட்டையில் மோதி எதிர் திசையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது 4 பேர் உயிரிழப்பு இந்த விபத்தில், காரில் பயணித்த 2 வயது குழந்தை, ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நாங்குநேரி போலீஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, ஒரு பெண் உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.ஏஎஸ்பி ஆய்வு சம்பவ இடத்தில் நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்ன குமார் விசாரணை மேற்கொண்டார். இந்த விபத்தால் திருநெல்வேலி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரி்த்து வருகின்றனர்.

