fbpx
Others

திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் மரத்தில் மோதி விபத்து-டிரைவர்தப்பினார்.

சத்தி, நவ. 30- ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கியாக பாதையாக திகழ்கிறது. இந்த வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியிலிருந்து திருப்பூருக்கு காய்கறிகளோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று திம்பம் மலைப்பாதையில் சென்ற போது, 14 வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சரக்க வேன் டிரைவர் உயிர் தப்பினார். விபத்து காரணமாக தமிழக – கர்நாடகா மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிப்படைந்தது.

Related Articles

Back to top button
Close
Close