தமிழ்நாடு பத்திரிகையாளர் டியூஜே சங்க மாநில நிர்வாககுழு கூட்டம்–சிறப்பு செய்தி.
தமிழ்நாடு பத்திரிகையாளர் டியூஜே சங்க மாநில நிர்வாககுழு கூட்டம் சென்னை மாவட்டம் ஏற்பாட்டில் சிந்தாதிரிபேட்டை சிங்கன்னசெட்டிதெரு, டிஜே நினைவக அரங்கில் நடந்தது. மாநிலதலைவர்.பி.எஸ்.டி.புருஷோத்தமன்தலைமைதாங்கினார்.மாநிலபொதுசெயலாளர் முத்து, சுரேஷ்,பொருளாளர். ரவிச்சந்திரன், துணைத்தலைவர். தமிழ்செல்வன், அமைப்பு செயலாளர். வேளாங்கன், இணைசெயலாளர். முருககனி, மாவட்ட கௌரவதலைவர். மைக்கேல் ஜார்ஜ், மாவட்ட தலைவர் தேவேந்திரன் வரவேற்றனர்..கூட்டத்தில் சங்க நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட பேரவை கூட்டம் நடத்துவது குறித்து பேசப்பட்டது.மேலும் பத்திரிகையாளர் கோரிக்கை மனுவை முதல்வரிடம் நேரில் தர தீர்மானிக்கப்பட்டது.இறந்த சங்க உறுப்பினர் களுக்கு மௌன அஞ்சலி செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்ட தலைவர். கோவிந்தராஜுலு, சென்னை மாவட்ட தலைவர். அப்சர்பாஷா, மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் சென்னை மாவட்ட செயலாளர். ஜாபர் நன்றி கூறினார்.


