தணிக்கைவாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…..
ஜனநாயகன் படத்தின் சென்சார் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து படக்குழு உச்ச நீதிமன்றத்தை அனுகினால் அதில் தங்களது தரப்பு கேட்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த கேவியட் மனுவை தணிக்கை வாரியம் தாக்கல் செய்துள்ளது ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவை தலைமை நீதிபதிகளின் அமர்வு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை பிடி ஆஷா மறுபடியும் விசாரிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படியான நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜனநாயகன் படக்குழு உச்ச நீதிமன்றத்தை அனுக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தணிக்கை வாரியம் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக படக்குழுத்தைஅனுகும்பட்சத்தில் அதில் தணிக்கை வாரியத்தின் தரப்பும் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தை எக்காரணம் கொண்டும் வெளியாக விடக் கூடாது என்பதில் தணிக்கை வாரியம் முழு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.