fbpx
Others

ஜுவல் ஒன் நிறுவனத்தின் மூன்றாவது கிளை கோவையில் திறப்பு ..

கோவை., மே. 31 :

நகை கடை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளையை கணபதி பகுதியில் நேற்று திறந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வைர நகைகள் கண்கவர் டிசைகளில் உள்ளன. திறப்பு சலுகையாக பழைய தங்க நகைகளை 50 சதவிகித தள்ளுபடியில் புதிய தங்க நகைகளாக மாற்றிக் கொள்ளலாம், வைர நகைகளுக்கு ஒரு காரட் பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது, வெஸ்டேஜ் 0% தங்க நகை நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பேட்டியளித்த ஜுவல் ஒன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தமிழகத்தில் இது 14- வது கிளை என தெரிவித்தார்.இங்கு பல்வேறு டிசைன்களில் நகைகள் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் எந்த டிசைன்களில் நகைகள் வேண்டும் என்று கேட்கிறார்களோ அது வடிவமைத்து தரப்படும் என தெரிவித்தார்.இதில் உடன் எமரால்டு நிறுவனத்தின் இயக்குனரான திரு. சீனிவாசன் மற்றும் ஜுவல் ஒன் இயக்குனரான திரு. தியான் சீனிவாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் Dr. விஷ்ணு பிரபு (வர்த்தக உயர் ஆணையர்) மற்றும் சேகர் (துணை ஆணையர் போக்குவரத்து),SNS கல்லூரியின் நிர்வாக இயக்குநர் நளினி, பாப்புலர் சிஸ்டம் CEO கலைவாணி, ரூபி பள்ளி முதல்வர் ஜோதி மற்றும் ரமணி குழும இயக்குநர் சசி மற்றும் வாடிக்கையாளர்களும் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்

 

Related Articles

Back to top button
Close
Close