ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’போர்டு அறிமுகம்..
ஆண்டுதோறும்தமிழரின்வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும். இதற்கு அடுத்தடுத்தநாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக அளவில் சிறப்புபெற்றவை. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினமான இன்று (15-ந் தேதி) அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும்நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் கோலாகலமாக போட்டிகள் நடைபெற உள்ளன.மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’போர்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புள்ளிகள் விவரம் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைக்கு முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும்,துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.