சென்னை சொத்து வரி பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் 1.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. கால அவகாசம் நீட்டிப்பு சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு 15.11.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர். சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
Read Next
Others
5 hours ago
ஸ்டிக்கர் செய்தி…..?
Others
15 hours ago
கர்நாடகா மாநிலத்தில் நடுவர் பயிற்சிமுகாம் ..
2 mins ago
அமித்ஷா–“பிரஜ்வல் ரேவண்ணா மீதான நடவடிக்கைக்கு ஆதரவு”..
20 mins ago
ப.சிதம்பரம்–இனிஇந்தியாஉலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்..
33 mins ago
ப.சிதம்பரம் — “பாஜக தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது”..
5 hours ago
ஸ்டிக்கர் செய்தி…..?
7 hours ago
பெண்கள் குறித்துசர்ச்சை — எச்.ராஜா மீதான வழக்கு ….
8 hours ago
முதல்வர்ஸ்டாலின்குடும்பத்துடன்கொடைக்கானலில்ஓய்வு….
8 hours ago
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம்–உயர் நீதிமன்றம் உத்தரவு.
15 hours ago
திருவாரூர்– நீடாமங்கலம் மர்ம நபர்கள் சிலர் ஹரிஹரனை படுகொலை செய்தனர்..
15 hours ago
திருச்சி-தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின் பொதுக்குழு
15 hours ago
கர்நாடகா மாநிலத்தில் நடுவர் பயிற்சிமுகாம் ..
Related Articles
தேவசெய்தி 28 / 4 / 24
2 days ago