சென்னையில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் அதிரடியாக உயர போகிறது….
சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அதிக மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், அண்ணா நகரில் அமலில் உள்ளது. (நியூ ஆவடி சாலை, ஈ.வி.ஆர். சாலை மற்றும் வெளிவட்டச் சாலை ஆகியவற்றால் சூழப்பட்ட 6 சதுர கி.மீ. பகுதி). அடுத்ததாக மெரினா கடற்கரையில் அமலில் இருக்கிறது. இதேபோர் திநகரில் பனகல் பூங்கா, ஜி.என். செட்டி சாலை, பாண்டி பஜார், வெங்கட்நாராயணா சாலை மற்றும் பிற சாலைகளில் அமலில் உள்ளது. அதேபோல் நுங்கம்பாக்கம், பெசன்ட்நகரிலும் அமலுக்கு வருகிறது.இதில் சென்னை மாநகராட்சிக்காக சி.யூ.எம்.டி.ஏ தயாரித்த ஏரியா லெவல் பார்க்கிங் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக , அண்ணா நகரில் நியூ ஆவடி சாலை, ஈ.வி.ஆர். சாலை மற்றும் வெளிவட்டச் சாலை ஆகியவற்றால் சூழப்பட்ட 6 சதுர கி.மீ. பரப்பளவில் இருசக்கர வாகனங்களுக்கு மூன்று மடங்கும், கார்களுக்கு இருமடங்கும் உயருகிறது. அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. கார்களுக்கு கார்களுக்கு ரூ.20-லிருந்து ரூ.40 ஆக இருமடங்கு உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட
கட்டணத்தைத் தவிர, இந்தத் திட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வாகனங்களை நிறுத்தும் வாகனங்கள் கிளாம்பிங் செய்யப்படும். மேலும், தினசரி அபராதக் கட்டணங்கள் விதிக்கப்படும், மற்றும் ஆறு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்படும்எந்தவொருவாகனமும்கட்டாயமாகஇழுத்துச்செல்லப்படும்.கட்டணஉயர்வுதிட்டம்ஐந்துஆண்டுகளுக்குதனியாரிடம்டெண்டர்விட்டு,செயல்படுத்தப்படும். இதற்காக 2,100 ஈக்குவலன்ட் கார் ஸ்பேசஸ் சி.யூ.எம்.டி.ஏ-வின் பார்க்கிங் மென்பொருள் மூலம்டிஜிட்டல்முறையில்நிர்வகிக்கப்படும்.இதற்காகபிரத்யேகஉள்ளூர்கட்டுப்பாட்டுமையம்அமைக்கப்பட்டுகண்காணிக்கப்படும்.கண்காணிப்பைக் கடுமையாக்கும் விதமாக, 11 நிமிடங்கள்முதல்மூன்றுமணிநேரம்வரைஅதிகநேரம்நிறுத்தும்வாகனங்கள்கிளாம்பிங்செய்யப்படவாய்ப்புஉள்ளது.இருசக்கரவாகனங்களுக்கு ரூ.100 மற்றும் கார்களுக்கு ரூ.300 செலுத்திய பின்னரேஅவைவிடுவிக்கப்படும்.மூன்றுமணிநேரத்திற்குமேலும்ஆறுமணிநேரம்வரையிலும்,வழக்கமானபார்க்கிங்கட்டணங்களுடன் கிளாம்பிங் கட்டணங்களும் சேர்க்கப்படும். அதேபோல் ஆறு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் இழுத்துச் செல்லப்படும்.இதற்கானகட்டணங்கள்இருசக்கரவாகனங்களுக்குரூ.225,கார்களுக்குரூ.450மற்றும்வணிகவாகனங்களுக்குரூ.800 .வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தினசரி அபராதக் கட்டணங்கள் வாகன வகையைப் பொறுத்து ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. வாகனம் நிறுத்தக்கூடாத இடங்களில் நிறுத்துவதற்கான அபராதம் ரூ.500 ஆக இருக்கும். இந்த கடுமையான அபராதங்கள் அங்கீகரிக்கப்படாத வாகனநிறுத்தத்தைத் தடுப்பதற்கும், பரபரப்பான சாலைகளில் போக்குவரத்து சீராகச் செல்வதற்கும் உதவும்என்றுசென்னைமாநகராட்சிஅதிகாரிகள்நம்பிக்கைதெரிவிக்கின்றனர். போக்குவரத்து மற்றும் பார்க்கிங் தேவை அதிகமாக உள்ள 26 கி.மீ. பரப்பளவிலான சாலைகள் முதல் கட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.சென்னையில் முக்கிய சாலைகளில் சராசரியாக 11,500 வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் தேவையாகும். ஆனால் ஆரம்பத்தில் சுமார் 2,100 வாகனங்களை நிறுத்த மட்டுமே இடமளிக்க முடியும். பல அடுக்கு கட்டமைப்புகள் உட்பட கூடுதல் சாலையோரமற்ற பார்க்கிங் வசதிகள் அரசால் உருவாக்கப்பட்டு, பின்னர் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் வசூலிக்கும் 10 இடங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு. ராயப்பேட்டை பஜார்.அண்ணாநகர் 2-வது அவென்யூ.என்.எஸ்.சி. போஸ் ரோடு.பெசண்ட் நகர் 6-வது அவென்யூ.நுங்கம்பாக்கம் காதர்நவாஸ்கான்ரோடு.,.தி.நகர்ஜி.என்.செட்டி ரோடு.மைலாப்பூர் தெப்பக்குளம்.சேத்துப்பட்டு மெக்கானிக்ஸ் ரோடு.