fbpx
Others

சத்தியமங்கலத்தில் மான் கறி வைத்திருந்தவர்க்கு அபராதம் 25000/-

ஈரோடு மாவட்டம் சத்தி, ஜன. 08 – சத்தி வனச்சரகம், கெம்பநாய்க்கம் பாளையம் வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் கிராமம், கருமலை தோட்டத்தில் வசிப்பவர் பெருமாள் இவர் தனது தோட்டத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதை பார்த்து அதை எடுத்து வந்து சிறு துண்டுகளாக  வெட்டிக்கொண்டு இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சத்தி வனத்துறை அதிகாரிகள் மான்கறி வெட்டி கொண்டிருந்த பெருமாளை கையும் களமாக பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நாய்கள் துரத்தியதில் மான் இறந்து கிடந்தாகவும் மான் கறி சாப்பி கறியை வெட்டிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். சத்தி வனத்துறை அதிகாரிகள் ரூபாய் 25000 அபராதம் விதித்தனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ் குமார்

Related Articles

Back to top button
Close
Close