கோவை;கவுண்டம்பாளையம் அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று மதியம் வழக்கம் போல் மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் உணவு வழங்கப்பட்டது. மதிய உணவை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவ மாணவிகள் திடீரென மயக்கமடைந்தனர்.உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதித்து முதலுதவி சிகிசை அளித்தனர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டசாப்பாடுமற்றும்சாம்பாரைபார்வையிட்டனர். இதில் சாம்பாரில் பல்லி ஒன்று விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மருத்துவக் குழுவினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள், 13 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மாணவ – மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் குவிந்தனர். அவர்களை ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனது என பார்க்க விடுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனால்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருப்பதை சொன்னதும் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.இதேபோல் மாநகராட்சி அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவ மாணவிகளை பார்வையிட்டனர். அவர்களது பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் பல்லி விழுந்த சாம்பார், உணவுகளை ஆய்வு செய்து, உணவு மாதிரிகளை சேகரித்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.