Others
கோவை– தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் !
கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் முத்துக்குமார் இவர் (30-12-2024) நேற்று இரவு போத்தனூர் பகுதி ஜம் ஜம் நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது KL23E0132 என்ற இன்னோவா கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி காவலர்கள் காரை தணிக்கை செய்யும் போது காரினுல் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 29 கிலோ கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் அந்த இளைஞர் பாலக்காடு அருகே உள்ள உலவக்கோடு பகுதியை சார்ந்த முஹமது சபீரை என்பது தெரியவந்தது. இது குறித்து உதவி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் கூறுகையில் தடைசெய்யப்பட்ட குட்காவை எடுத்துவந்த காரை பறிமுதல் செய்து முஹமது சபீர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.