கு. முத்துக்குமார்–17 ஆம் ஆண்டு புகழஞ்சலி …
இலங்கை தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் 17-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கொளத்தூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப்படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.உடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமைநிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் A.முருகேசபாண்டி, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் அருணாசலமூர்த்தி மற்றும் அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
